Adi Vaadi Maane

Adi Vaadi Maane Song Lyrics In English




அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே

கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்

மதுவதன் சாரம் இதழதன் ஓரம் ஊறுவதென்னம்மா புது புது பாவம் விழியதன் ஓரம் தோணுவதென்னம்மா ஹரேபரபபபரபபப்பாபரப்பர

அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே

கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்



வசந்தத்தின் சாயல் கண்டு வந்தாயோ காதல் கொண்டு வசந்தத்தின் சாயல் கண்டு வந்தாயோ காதல் கொண்டு

வண்டென்று திண்டாடினாய் வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஹேய் வண்டென்று திண்டாடினாய் வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய்

வாரே வாஹ் நீர் வாழும் மீன்கள் வந்து நெளிகின்ற கலையை பயில வான் வாழும் மீன்கள் வந்து ஜொலிகின்ற வகையை கேட்க மை விழி ஜாலம் செய்கின்றாள் மானினம் என்று ஏய்க்கின்றாள்

காளை உன் வர்ணனை கேட்கின்ற பெண் என்னை ஏன் கொல்கிறாய் ஒஓஹோய்ஒஓஹோய்ஓஓஹோய்ஓஓஹோய் ஹரேபரபபபரபபப்பாபரப்பர


அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே

கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்

பூவை உன் இதழைக் கண்டு பேசாத ரோஜாப் பூக்கள் பூவை உன் இதழைக் கண்டு பேசாத ரோஜாப் பூக்கள்

நிறம் பார்த்து தடுமாறுதோ அதன் பதம் பார்த்து தலை குனியுதோ ஹாஹ்ஹாஹ் நிறம் பார்த்து தடுமாறுதோ அதன் பதம் பார்த்து தலை குனியுதோ

வாரேவாஹ்நிலவங்கு நாணும்போது மேகத்தை முக்காடாக்கு நீ என்னை காணும் போது நிலம் தானே என்னைப் பார்க்கும் நீரலையென நாணங்கள் கரை புரளுதே காணுங்கள்

தேவலோகத்தில் இல்லாத அமுதத்தை கொண்டாந்த செம்மாங்கனி ஒஓஹோய்ஒஓஹோய்ஓஓஹோய்ஓஓஹோய் ஹரேபரபபபரபபப்பாபரப்பர

அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே

கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்