Amour |
---|
இசை அமைப்பாளர் : பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் கே ஆர்
பாடல் ஆசிரியர் : சஞ்சய் பிரசாத் கே ஆர் மற்றும் கோபி முருகன்
சில நேரம் உன்னை காண என் மனமும் கேட்பது ஏனோ பல நேரம் என்னுள் நானே சொல்லாமல் சிரிப்பது ஏனோ
சில நேரம் உன்னை காண என் மனமும் கேட்பது ஏனோ பல நேரம் என்னுள் நானே சொல்லாமல் தொலைவது ஏனோ
என் கண்ணுள் உன்னை வைத்தேன் உன் பின்னால் நானும் வந்தேன் என் கோபம் என்னை விட்டு போனதே
என் சுவாசம் நீயே தானே என் மொழியும் நீயே தானே சொல்லாமல் போன பின்பும் உன்னை தேடி நானும் வந்தேன்
காலங்கள் போன பின்பும் என்னுயிரும் பிரிந்த பின்பும் என்னுள்ளே நீதான் இருப்பாயே
வெகுதூரம் போன பின்பும் என்னை நீ மறந்த பின்பும் என்னுள்ளே நீதான் இருப்பாயே
உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள் எல்லாம் மனதுக்குள் கேட்கிறதே நீ சொன்ன வார்த்தைகள் கவிதை போல என்னுள்ளே இனிக்கிறதே
உன் முடிவும் தேவை இல்லை பதிலும் தேவை இல்லை நினைவு போதும் எனக்கு
என் கனவில் நீயும் வந்தாய் விழியில் நிலைத்து நின்றாய் நிஜங்கள் மறக்க செய்தாய்
காலங்கள் போன பின்பும் என்னுயிரும் பிரிந்த பின்பும் என்னுள்ளே நீதான் இருப்பாயே
வெகுதூரம் போன பின்பும் என்னை நீ மறந்த பின்பும் என்னுள்ளே நீதான் இருப்பாயே