Arava Baranan Thiruvadi |
---|
அரவா பரணன் திருவடி மறந்து அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் பகுத்தறிவிழந்து உழல்வாரே
மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர் சங்கரனை மனம் நினைவாரோ மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர் சங்கரனை மனம் நினைவாரோ நங்கையர் காதல் நிறைந்திடில் நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
வாத நோய்க்குலகில் மருந்துண்டு வாத நோய்க்குலகில் மருந்துண்டு பிடிவாத நோயகல மருந்தேது பிடிவாத நோயகல மருந்தேது சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர் சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர் காதினில் ஞானமொழி ஏறாதே
அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் பகுத்தறிவிழந்து உழல்வாரே