Azhagukku Porul Koorum |
---|
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன்
சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும்
சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன்
சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும்
என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது
என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது
உன் பன்னிருக்கை முன்னிருந்து பாதுகாக்குமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
ஏது பாதை என்று நான் அறியாத போது
ஆஆஆ
ஏது பாதை என்று நான் அறியாத போது
இது பாதை என்று நீ நடை போட வைத்தாய்
தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம்
தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம்
என் தமிழ் ஞானம் போற்றுவது உன் சந்நிதானம்
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன்
அழகான மயிலாட ஆடல் வந்தது
அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன்
அழகான மயிலாட ஆடல் வந்தது
சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது
சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது
கந்தனெனும் மந்திரம் என் கவசமானது
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே