Devan Magalo Malaro |
---|
பாடலாசிரியர் : அறியபடவில்லை
தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன் பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ
ஆதியும் அந்தமும் பூமகள் மேனியில் சந்தோஷ வெள்ளங்கள் ஓட ஆடையில் வானவில் மேடையில் ஆடுதோ ஆனந்த ராகங்கள் பாட
தாமரையின் இதழ் மீது தேன் துளிகள் விழும்போது சுவைத்தால் சுகம்தான் ஏதோ ஏதோ
தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன் பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ
ஆயிரம் தீபங்கள் ஏற்றிய ராத்திரி ஆணைகள் அம்பாரி தாங்க ராஜனும் ராணியும் ஊர்வலம் போய்வர வெண்மேகம் பன்னீரைத் தூவ
ஆசைகளை விழி பேச ஜாடைகளின் மொழி பேச தொடங்கும் தொடரும் காதல் யாகம்
தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ ஆஆபௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ