En Arumai Selvangal

En Arumai Selvangal Song Lyrics In English


மற்றும் தீபன் சக்கரவர்த்தி

அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

ஆகாயம் ஏவல் செய்யும்
ஆஹா
எங்கும் ஆனந்தச் சாரல் விழும்
ஆஹா
பொன் நாளென்பது
இந்நாள் வந்தது ஹா
என் வானத்திலும்
பொன் மீன் வந்தது

என் கண்ணில் இன்ப ஈரம்
என் நெஞ்சில் அன்பு பாரம்
என் வீடெங்கும் நாள்தோறும்
சந்தோஷ சங்கீதம்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே


கைகளும் தாழ்ந்ததில்லை
கால்களும் சோர்ந்ததில்லை
யாசகம் கேட்டதில்லை
பூமியை பார்த்ததில்லை

கைகளும் தாழ்ந்ததில்லை
கால்களும் சோர்ந்ததில்லை
யாசகம் கேட்டதில்லை
பூமியை பார்த்ததில்லை

மானத்தில் மானானவன்
ஆஹா
தலை யாருக்கும் சாயாதவன்
ஆஹா
என் ஆசைகளை
என் தேவைகளை
என் வேர்வைகளால்
நான் தீர்க்கின்றவன்

என் நெஞ்சில் உண்டு தங்கம்
என் கண்ணில் உண்டு வைரம்
என் ராஜாங்கம் என் வீடு
இங்குண்டு சிம்மாசனம்

அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே