Enna Enna Kanavu |
---|
என்ன என்ன கனவு
கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவுதான்
ஐயா சாமி
ஒன்றை உந்தன் மனம்
கேட்டது அந்த
ஒன்றும் வேறு இடம் போனது
கையில் வரும் என
பார்த்தது இன்று
கை நழுவி ஏன் போனது
என்ன என்ன கனவு
கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவுதான் ஐயா
ஓடைக் குளிர் ஓடை என
மான்கள் நம்பி ஓடும்
வேளை அது கோடை எழும்
கானல் என்று மாறும்
நெஞ்சோடு தோன்றுகின்ற
நேசம் யாவும்
நில்லாமல் ஓடுகின்ற நீர் வேகம்
கண்ணோடு காணுகின்ற
கோலம் யாவும்
தண்ணீரில் போட்டு வைத்த கோடாகும்
வழிக்கி வந்தது துணையா
இல்லை வழுக்கி விட்டிடும் வினையா
இதை என்னென்று சொல்வது
சித்திர பதுமையே
என்ன என்ன கனவு
கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவுதான்டி
ஓம்ஓம்ஓம் ஓம்(2)
ஓம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம்
ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம் ஓஒம்ம்ம்(2)
காலை அந்தி மாலை
இந்த பாவை செய்யும் யாகம்
ஓம்ஓம்ஓம் ஓம்
நாளை நல்ல வேளை
வந்து சேர நிறை வேறும்
ஓம்ஓம்ஓம் ஓம்
பொல்லாது பூமியிலே
பெண்ணின் பாவம்
நாளான போதும் அது தீராது
வெல்லாது போனதில்லை
பெண்ணின் ஞாயம்
உண்டான நீதி இங்கு மாறாது
வரட்டும் என்றிங்கு இருப்பாள்
ஓம்ஓம்
தர்மம் ஜெயிக்கும்
என்றிவள் பொறுப்பாள்
ஓம்ஓம்
இந்த உத்தமப் பத்தினி
தத்துவம் தவறுமோ
என்ன என்ன கனவு
கண்டாயோ மானே
வாழ்க்கை ஒரு கனவுதானடி
மானே
செய்த தவம் முடிவானது
மானே
நள்ளிரவு விடிவானது
உண்மை இங்கு தெளிவானது மானே
பொய்மை இன்று வெளியானது
என்ன என்ன கனவு
கண்டாயோ மானே
வாழ்க்கை ஒரு கனவுதானடி