Gowri Manohariyai |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
கெளரி மனோகரியை கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே கெளரி மனோகரியை கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே பருவங்கள் சென்றாலும் கண்ணன் அவன் கவிராஜ சங்கீத மன்னன் அவன் கவிராஜ சங்கீத மன்னன்
என் பேரில் சுகமான ராகம் ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம் என் பேரில் சுகமான ராகம் ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம் நீ மழை நாளில் விளையாடும் மேகம் என்ன வயதென்று தோன்றாத வேகம்
கெளரி மனோகரியை கண்டேன் ஒரு காரிகை வடிவத்திலே பருவங்கள் சென்றாலும் ராதை அவள் கவிராஜ சங்கீத மேதை
தாராத செல்வங்கள் தாய்மை அவையானாலும் என் உள்ளம் ஊமை கண் முன்பு அழகான ஆண்மை நான் கல்லல்ல கனிவான பெண்மை
பண்பாடு என்பார்கள் சிலரே இதில் பெண் பாடு கண்டோர்கள் எவரே என் பாடு நான்தானே அறிவேன் உயர் அன்போடு மனம் போல இணைவேன்
கெளரி மனோகரியை கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே
மலை மீது அடித்தாலும் காற்று அது கடல் மீது தவழ்ந்தாலும் காற்று வயதோடு வந்தாலும் காதல் அது வயதாகி வந்தாலும் காதல்
உலகத்தில் சில நூறு எழுத்து ஆனால் உறவுக்கு பலகோடி கருத்து உன் வாழ்வை நீயாக நடத்து இதில் ஊரென்ன சொன்னாலும் திருத்து
கெளரி மனோகரியை கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே கெளரி மனோகரியை கண்டேன் ஒரு காரிகை வடிவத்திலே