Ilanguyil Paadutho |
---|
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பெண் : மன்னன் மடியில் நானாட மஞ்சள் குளித்து பூச்சூட ஆண் : ஊமை கனவில் நான் வாட உன்னை நினைத்து போராட
பெண் : அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில் ஆண் : இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு பெண் : உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு ஆண் : முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு பெண் : கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு
ஆண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ பெண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
ஆண் : வீணை இருக்கு மீட்டாமல் வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல் பெண் : அந்தப்புரத்தில் நீ மீட்டு ஆதி தாளத்தை நீ போட்டு ஆண் : கையோடும் மெய்யோடும் காதல் தேவன் கீர்த்தனை தான்
பெண் : போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும் ஆண் : பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும் பெண் : எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு ஆண் : தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ ஆண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பெண் : பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது ஆண் : கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது இருவரும் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ