Irai Thandha |
---|
இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே மறையாத ஒளி நீயே மடிமீது துயில்வாயே
உனை பெற்றதனாலே நான் அற்புதமானேன் உனை வெற்றிடமாக நான் விடமாட்டேன் இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே
தவமாய் தவமிருந்து பலநாள் சுமந்திருந்து உதித்தது ஒளி விளக்கு உனதன்னை வயிற்றினிலே வலியேதும் கொடுக்காமல் வலிகண்டு பிறந்த பிள்ளை வெளிவந்த பின்னாலே விடிந்தது என் உலகு
உறவே நீ இருந்தால் போதும் போதும் உயிரே என் உயிராய் ஆகும் ஆகும்
இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே
என்னை நினைப்பதில்லை என்றும் உன் நினைவு முன்னைப் பிறவி தொட்டு முடிந்தது நம் உறவு உனக்கெதும் இல்லை கண்ணா உனை விட்டு நான் பிரியேன் எனக்கென ஏதும் இல்லை என் உயிரை நான் மறவேன்
இறைவன் எனக்களித்த ஜீவன் ஜீவன் என்றும் என்னுடன் ஒன்றாகும் ஆகும்
இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே
உனை பெற்றதனாலே நான் அற்புதமானேன் உனை வெற்றிடமாக நான் விடமாட்டேன்
இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே உயிர் நீயே உயிர் நீயே