Kadhal Mattum Purivathillai

Kadhal Mattum Purivathillai Song Lyrics In English


காதல் காதல்
காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட
படவென்று பட்டாம்பூச்சி
ஓடுதடா

எங்கேயோ
எங்கேயோ இவனை
இவனே தேடுகிறான்
தாய் மொழி எல்லாம்
மறந்து விட்டு தனக்குள்
தானே பேசுகிறான்

காதல் மட்டும்
புரிவதில்லை காற்றா
நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும்
தெளியவில்லை



காதல் காதல்
காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட
படவென்று பட்டாம்பூச்சி
ஓடுதடா

நேற்று வரைக்கும்
இங்கிருந்தேன் இன்று என்னை
காணவில்லை வெயில் இல்லை
மழை இல்லை பார்த்தேனே
வானவில்லை

என் நெஞ்சோடு
ரசித்தேன் கொல்லாமல்
கொல்கின்ற அழகை உயிரில்
ஓர் வண்ணம் குழைத்து
வரைந்தேன் அவளை

காதல் மட்டும்
புரிவதில்லை காற்றா
நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும்
தெளியவில்லை

காதல் காதல்
காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட
படவென்று பட்டாம்பூச்சி
ஓடுதடா


பாலைவனத்தில்
நடந்திருந்தேன் நீ வந்து
குடை விரித்தாய் எந்தன்
பெயரே மறந்திருந்தேன்
நீ இன்று குரல் கொடுத்தாய்

என் கண்ணாடி
மனதில் இப்போது என்
முகம் பார்த்தேன் நீ வந்த
பொழுதில் எந்தன் நெஞ்சம்
பூத்தேன்

நதிகள் கடலில்
தெரிவதில்லை நட்பில்
கவலை புரிவதில்லை
இதயம் ரெண்டும்
சேர்ந்திருந்தால் இரவும்
பகலும் பார்ப்பதில்லை

காதல் காதல்
காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட
படவென்று பட்டாம்பூச்சி
ஓடுதடா

எங்கேயோ
எங்கேயோ இவனை
இவனே தேடுகிறான்
தாய் மொழி எல்லாம்
மறந்து விட்டு தனக்குள்
தானே பேசுகிறான்

காதல் மட்டும்
புரிவதில்லை காற்றா
நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும்
தெளியவில்லை