Kannamma Reprise |
---|
ஓ கண்ணம்மா
கண்ணம்மா ஆஆ
கண்ணம்மா
பெண்ணே யாரடி
நீ உந்தன் பார்வை தொட்ட
உடன் வலிகள் கரைந்து
போகுதே
அன்பே யாரடி நீ
உந்தன் குரலை
கேட்கயிலே மனதில்
உறுதி கூடுதே
எதையும் தாங்குவேன்
நீ இருந்தால் துணையாய்
இருந்தால் மருந்தாய்
இருந்தால் அருகே
இருந்தால் அன்பே
காயங்கள் ஆற்றுவேன்
உடைந்து போனவன்
ஒருங்கினைவேன் பார்வை
பசியில் நெஞ்சின் இசையில்
காதல் விசையில் அன்பே
மீண்டும் என்னை
காணுவேன் யே
கண்ணம்மா எந்தன்
ஜீவனே என் அன்பே என்
அன்பே எந்தன் ஓருயிரே
அன்பே போதுமடி
என் கர்வம் நான் கலைந்து
உனது காலில் வீழ்கிறேன்
அன்பே வேண்டுமடி
நீ முத்தம் ஒன்று இட உருகி
குழந்தை ஆகிறேன்
உடைந்து போனதாய்
கிடந்த என்னை கையில்
எடுத்தாய் உயிர் நீ
கொடுத்தாய் தாயாய்
கிடைத்தாய் அன்பே
உன் அன்பை கூறவே
கடந்த காலங்கள் மறையுதடி
வலிகள் குறைய மனமோ
கரைய என்னில் நீ நிறைய
அன்பே ஏதும் தேவை
இல்லையே
கண்ணம்மா
அன்பே மயிலிறகே
உன்னை சூடி கொண்டு
உயர உயர உயர நெஞ்சம்
ஏங்குதே
அன்பே மாற்றுயிரே
உன்னை மட்டும் பற்றி
கொண்டு பறந்தேன்
பறந்தேன் அச்சம்
நீங்குதே
சிலிர்த்து போகிறேன்
தூரல்களை வானம் இழந்து
மேலே எழுந்து வசியும்
விழியில் அன்பே அன்பே
கோடி நன்றி கூறுவேன்
கண்ணம்மா
எனது தோல்விகள்
பகிர்ந்தவளே எந்தன்
வெற்றிகள் முழுதும்
உனதே எதையும் கடப்பேன்
அன்பே அன்பே நீ தந்த
வானமடி