Kannoramai Kadhai Pesu |
---|
கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு தேவலோகம் உன் ஊரா தென்றல் என்பதுன் பேரா
வில்லை ஏந்திடும் வீரா வேட்டையாட வந்தீரா அடடா காதல் போரிலே வீரன் மனதினை பூக்கள் பறித்திடும் மாயம் என்ன காதல் தேரினில் மன்னன் மடியினில் நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன
கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு
கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம் கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம் அன்பின் அருவியேகண்களானதோ
சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும் எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும் அமுதசுரபியேஉள்ளமானதோ
உள்ளங்கையில்தான் அன்பே உன் முகம் பார்த்தேனே உயிரின் நிழலாக அன்பே உன்னைப் பார்த்தேனே ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே
கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு
வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும் வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும் உள்ளம் கேட்டு நான்உன்னை கெஞ்சினேன்
மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும் மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும் நானும் வாழவேஉன்னைக் கேட்கிறேன்
உலகின் அழகெல்லாம் அன்பே உன்னில் பார்த்திடவா இதயத் துடிப்பெல்லாம் அன்பே உன் பெயர் கேட்டிடவா என்னுயிரே நீயாய் ஆனால் மரணம் ஜெயித்திடுவேன்
கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு தேவலோகம் உன் ஊரா தென்றல் என்பதுன் பேரா
வில்லை ஏந்திடும் வீரா வேட்டையாட வந்தீரா அடடா காதல் போரிலே வீரன் மனதினை பூக்கள் பறித்திடும் மாயம் என்ன காதல் தேரினில் மன்னன் மடியினில் நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன