Katha Naayagan

Katha Naayagan Song Lyrics In English


கதாநாயகன் கதை சொன்னான்
கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

கதாநாயகி கதை சொன்னாள்
கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள்

காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்
காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்
கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான்
என்னைக் கட்டிக் கொண்டான்
நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்
ஆஆஆஹாஹாஹா

கதாநாயகன் கதை சொன்னான்

குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே
குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே
முத்தாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்ல மூடிக்கொண்டான்
இசை பாடிக்கொண்டான்
ஆஆஆஹாஹாஹா

கதாநாயகன் கதை சொன்னான்


மாமல்லபுரத்துக் கடல் அருகே
மங்கை இருந்தாள் என்னருகே
மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்த மங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம்
தேன் நிலவு

கதாநாயகி கதை சொன்னாள்

அந்த கண்ணுக்குள்ளும்
இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

அங்கயற்கண்ணி தேசத்திலே
அழகிய வைகை ஓரத்திலே
பொங்கும் காதல் வேகத்திலே
எனைப் பூட்டிக்கொண்டான்
கொடி நாட்டிக் கொண்டான்