Katha Naayagan |
---|
கதாநாயகன் கதை சொன்னான்
கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
கதாநாயகி கதை சொன்னாள்
கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்
காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்
கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான்
என்னைக் கட்டிக் கொண்டான்
நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்
ஆஆஆஹாஹாஹா
கதாநாயகன் கதை சொன்னான்
குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே
குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே
முத்தாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்ல மூடிக்கொண்டான்
இசை பாடிக்கொண்டான்
ஆஆஆஹாஹாஹா
கதாநாயகன் கதை சொன்னான்
மாமல்லபுரத்துக் கடல் அருகே
மங்கை இருந்தாள் என்னருகே
மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்த மங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம்
தேன் நிலவு
கதாநாயகி கதை சொன்னாள்
அந்த கண்ணுக்குள்ளும்
இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
அங்கயற்கண்ணி தேசத்திலே
அழகிய வைகை ஓரத்திலே
பொங்கும் காதல் வேகத்திலே
எனைப் பூட்டிக்கொண்டான்
கொடி நாட்டிக் கொண்டான்