Kelambu

Kelambu Song Lyrics In English


ஆத்திரம் தலைக்கேறுதே
தணல் ஆகுதே தணியாமலே
என் வீதியில் உனக்கென்னடா
வெண்சாமரம் ஆயுதம்
எடுப்பேனடா எதிர்ப்பேனடா
எரிப்பேனடா என் பாதையில்
நீ வைப்பதா உன் கால் தடம்

தெரியும் எதை
எப்போது எந்நேரம்
செய்கின்றதென்று
இனியும் இனியும்
அட செல்லாது நீ
செய்யும் ராஜாங்கமே

கெளம்பு
கெளம்பு கெளம்பு
கெளம்பு

நீ என்ன நீ என்ன
நாட்டாமையா என் சொல்லை
நீ பேச நான் உண்மையா உன்
கையில் உன் கையில் நான்
பாவையா ஓடோடி போ
உந்தன் உயிர் தேவையா

இலை கண்டு
தலை ஆட்ட அட நான்
ஒன்றும் ஆடில்லை
இறை கண்டு அதில்
மாட்ட அட நான் ஒன்றும்
மீனில்லை


நீ கூடாரம் போட்டு
அதில் கொட்டாரம் போட
இடம் இங்கே தான் இல்லை
இனி கெளம்பு

என் வீட்டை வீட்டை
நீ ஆள்வதா நீ போட்ட
கூட்டுக்குள் நான் வாழ்வதா
ஏன் என்று கேட்காமல் நாள்
போவாதா நீ வாழ நீ வாழ
நான் சாவதா

இனிமேலும்
குனியாதே அட
பொறுமைக்கும்
உண்டெல்லை தடை
மீறி நுழைந்தாலே
அவன் தலை வாங்கு
தப்பு இல்லை

இது என்னோட
கோட்டை இன்று என்
கையில் சாட்டை உன்
தோள் பிஞ்சு தொங்கும்
முன்னே கெளம்பு