Kodai Marainthal Inbam

Kodai Marainthal Inbam Song Lyrics In English


பாடகர்கள் : பி சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : எஸ் ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி

கோடை மறைந்தால் இன்பம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஓடும் தென்றல் முன்னால் வரும் ஓடும் தென்றல் முன்னால் வரும் இசை பாடும் குயிலோசை தன்னால் வரும் ஓடும் தென்றல் முன்னால் வரும்

வாசமாமலர் வாவென்றசைந்ததே ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே பேசினால் சுகம் வருமோ தெரிந்தே மாசிலா இன்பம் இனிமேல் நமதே


கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும்

பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம் பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம் பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம் பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம் பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம் பாவை உனதொரு முகமே உதயம்

ஓடும் தென்றல் முன்னால் வரும் இசை பாடும் குயிலோசை தன்னால் வரும் ஓடும் தென்றல் முன்னால் வரும்

ஆனந்தம் அது எங்கே பிறந்தது? அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது இருவர் : ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது உண்மைக் காதல் உறவே பெரிது

இருவர் : கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும்