Kolam Inge Vaasal Enge

Kolam Inge Vaasal Enge Song Lyrics In English


கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே

கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே

நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது

கோடை நாளில் நீருமில்லை ஓடைக்கென்ன நிந்தனை உதடு உண்டு முத்தம் இல்லை நான்கு கண்ணில் வேதனை விதி வந்துதான் ஏதோ தடைப்போட்டது இதற்காகவா தாலி முடிப் போட்டது

கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே


இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது

சாதி இங்கே சதிகள் செய்தால் நீதி எங்கே போவது வேலி வந்து காலில் தைத்தால் பயணம் என்ன ஆவது துயர் தீருமே கொஞ்சம் மயங்காதிரு சுகம் ஆகுமே நெஞ்சே கலங்காதிரு

கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே

கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ