Koozhukkum Aasa Meesaikkum

Koozhukkum Aasa Meesaikkum Song Lyrics In English


கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது

கட்டை விரல் போல் சுண்டு விரலும் வீங்கக் கூடாது கட்டை விரல் போல் சுண்டு விரலும் வீங்கக் கூடாது வீக்கம் என்பது எந்த நாளும் வளர்ச்சியாகாது

கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது

வண்டலூருல வயலு வரப்பில சுண்டலி ஒண்ணு இருந்திடுச்சாம் அது பெத்தப் பொண்ணுக்கு பெரிய எடத்துல மாப்பிள்ளை தேடி அலைஞ்சிடுச்சாம்

ரொம்ப பெரியவன் சூரியந்தான்னு அது கிட்ட போயி கேட்டுடிச்சாம் அது தன்ன மூடுற மேகந்தான் ரொம்ப பெரிய ஆளுன்னு சொல்லிடிச்சாம்

ஆங் அப்புறம் தன் மகளை கட்டிக்க சொல்லி மேகத்த கேட்டுச்சி மேகம் என்னப்பா சொல்லிச்சி

காத்தடிச்சா நான் கலஞ்சிடுவேன்னு கௌரவமாக சொல்லிடிச்சாம்

காத்துக் கிட்டப் போயி கேட்டதுக்கு அது என்ன சொல்லிச்சாம் தெரியுமா

அடிக்கிற காத்த தடுக்குது சுவரு அடிக்கிற காத்த தடுக்குது சுவரு அதுதான் பெரிசுன்னு சொல்லிடிச்சாம்

அப்போ சுண்டெலிக்கும் சொவருக்கும்தான் கல்யாணம் ஆச்சா இல்லையேசொவரு சொல்லிச்சு


வீட்டு சொவரா நான் இருந்தாலும் ஓட்டைப் போடுது எலி இனம்தான் எலிதான் பெரிசு என்றது சொவரு எலிக்கும் புரிஞ்சுது தான் பண்ண தவறு

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது

கரப்பான் பூச்சிக்கு மீச இருக்கு கட்ட பொம்மனா மாறிடுமா

வெள்ளாட்டுக்கும் தாடி இருக்கு வள்ளுவன் போலே பாடிடுமா

எப்படி இருந்தா நிம்மதி இருக்கும் அப்படி இருக்கணும் வாழ்க்கையிலே

எல்லைத் தாண்டி சீதை நடந்தா என்ன ஆச்சு பார் முடிவினிலே

கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது