Madhavanam Raghuraman

Madhavanam Raghuraman Song Lyrics In English


பெண் : மாதவனாம் ரகுராமன் மறுபடியும் பிறந்தானோ மனக் கதவை மூடாமல் எனக்காக திறந்தானோ

பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க மாணிக்க பொன் வீணை என்னை மீட்டும் விரல் வாழ்க

கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன் மை விழிப் பார்வையினால் உனக்கு நெய் விளக்கேற்றுகிறேன்

மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க

காலமெல்லாம் தலைவா உன் காலடியில் இருப்பேனே கவலைகளே அறியாமல் முகம் பார்த்து சிரிப்பேனே

மஞ்சளும் மாங்கல்யமும் மன்னவா நீ தந்த செல்வம் ஒன்றல்ல ஓராயிரம் அம்மம்மா நான் கொண்ட இன்பம்

மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க


ஆண் : நாயகியே உனை வாழ்த்தி நலம் பாடும் இதயம் இது நாள் முழுதும் அன்பே உன் நினைவாலே இயங்குவது

கண்களில் நீரோட்டம் ஏன் கைகளில் நான் தாங்கும்போது நெஞ்சிலே போராட்டம் ஏன் என்னுயிர் நீயாகும்போது

பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க மாணிக்க பொன் வீணை என்னை மீட்டும் விரல் வாழ்க

ஆண் : கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன் மை விழிப் பார்வையினால் உனக்கு நெய் விளக்கேற்றுகிறேன்

பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க