Maiyai Thottu Ezhuthiyavar

Maiyai Thottu Ezhuthiyavar Song Lyrics In English


மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்

படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் குடத்துள் விளக்காய் இருக்கின்றேன் மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்

கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா

மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்

மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன் பல்லவியே அவர் பெயர்தானே


கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய் மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய்

இருவர் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்

மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்