Malare Malare Mounam Enna |
---|
மலரே மலரே ஏய் மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன தென்றல்தான் தொடத்தான் சுகமோஓ மலரே மலரே மலரே மலரே
ஓர் வாலிபன் நேர் வந்ததும் ஆசைதான் விளைந்ததோ பூமேனியில் ஏன் வேர்வைகள் ஆடைதான் நனைந்ததோ
கண்கள் பாதியும் கைகள் பாதியும் உன்னைத் தொட்டதோ உள்ளம் சுட்டதோ உன் மனம் உன் வசம் இல்லையோ
மலரே மலரே மலரே மலரே
யார் கைகளில் யார் சாய்வதோ சொல்லத்தான் தயக்கமோ ஓர் லீலைதான் பொன் மாலையில் மெல்லத்தான் தொடங்குமோ
காதல் வேதனை காவல் மீறுமோ காவல் மீறினால் ஆவல் தீருமோ யாரிடம் சொல்வதோ அம்மம்மா
மலரே மலரே ஏய் மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன தென்றல்தான் தொடத்தான் சுகமோஓ மலரே மலரே மலரே மலரே