Mangalam Pongidum

Mangalam Pongidum Song Lyrics In English


மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

லாலி சுப லாலி சுப லாலி லாலி
லாலி சுப லாலி சுப லாலி லாலி

ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும்
சிரிக்கும் மாப்பிள்ளை
சீண்டும் உறவுகள்
மலர்முகம் கொஞ்சம்
மறைமுகம்
ரசிக்கும் மணமகள்
ராணி போல் அவள்

ஹோமத்தில் உருவாகும் ஜோதி
ஷேமத்தில் பறை சாற்றும் நீதி
ஒலிக்கும் மந்திரம்
புது உறவில் சங்கமம்
கெட்டிமேளம் தட்டும் தாளமும்
மாங்கல்ய வைபோகமே

மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்


மணவரை எங்கும் வாசமே
மங்கையின் மேனியில்
மாற்றம் தோன்றுமே

மெயில்லே நேசம் சுடர் விடும்
கற்பு நெறிதனை
கனலும் புரித்திடும்

கையேடு கை சேரும் போது
மெய்யோடு உயிர் சேர வேண்டும்
அம்மி மிதிக்கிறாள்
அதன் உறுதி மதிக்கிறாள்
சரி பாதியில் ஒரு பாதி
உமையாளுடன் சிவன் ஆகிறாள்

மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்