Mani Vilakkal Amma

Mani Vilakkal Amma Song Lyrics In English


மணி விளக்கால் அம்மா மகிழ வைத்தாள் இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே

மணி விளக்கால் அம்மா மகிழ வைத்தாள் இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே

கனவொன்று கண்டாள் ஆனால் மணம் ஒன்று கொண்டாலும் மனம் ஒன்றி நின்றாள் மணவாளன் காணாமல் வருந்தியே அலைந்தாள் மகனையும் தேடியிங்கே வாடுகின்றாள்

இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே


அம்மாஆஆ வலம்புரிச் சங்கும் கையில் விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள் வலம்புரிச் சங்கும் கையில் விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள் பிறந்தாலும் பிறந்தாள் பிழையென்ன புரிந்தாள் வழிப்பார்த்தே காலமெல்லாம் காத்து நின்றாள்

இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே

மணி விளக்கால் அம்மா மகிழ வைத்தாள் இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே