Mannane Enthan Mayakannane

Mannane Enthan Mayakannane Song Lyrics In English


மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா

மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு

வாழ்வே என நினைத்தேன் வரவை எதிர்ப்பார்த்தேன் வந்தாய் என அறிந்தேன் வாசல் இழந்தேன்

விழி இரண்டிலும் பார்வை ஒன்றுதான் நதி முடிவது கடலில் வந்துதான் எது தடுப்பினும் உன்னை சேருவேன் நிலா

நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா

கண்ணின் இமை அசைந்து தென்றல் வரக் கண்டேன் கனிவாய் மொழி அறிந்து கவிதை படைத்தேன்


மின்னும் பனித்துளி அரும்பும் சிரிப்பிலே பண்ணும் குறும்புகள் அழைக்கும் வனப்பிலே வண்ணக் கனவினில் மனதை பறிக்கிறாள்நிலா

நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா

நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா

பிறப்பது ஒரு முறை இறப்பதும் ஒரு முறை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை