Mannane Enthan Mayakannane |
---|
மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா
மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு
வாழ்வே என நினைத்தேன் வரவை எதிர்ப்பார்த்தேன் வந்தாய் என அறிந்தேன் வாசல் இழந்தேன்
விழி இரண்டிலும் பார்வை ஒன்றுதான் நதி முடிவது கடலில் வந்துதான் எது தடுப்பினும் உன்னை சேருவேன் நிலா
நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா
கண்ணின் இமை அசைந்து தென்றல் வரக் கண்டேன் கனிவாய் மொழி அறிந்து கவிதை படைத்தேன்
மின்னும் பனித்துளி அரும்பும் சிரிப்பிலே பண்ணும் குறும்புகள் அழைக்கும் வனப்பிலே வண்ணக் கனவினில் மனதை பறிக்கிறாள்நிலா
நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா
நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா
பிறப்பது ஒரு முறை இறப்பதும் ஒரு முறை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை