Mouname Nenjil |
---|
மௌனமே நெஞ்சில் நாளும்
நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனி மாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி
மௌனமே நெஞ்சில் நாளும்
நீ எழுதும் கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே