Narumana Malargalin

Narumana Malargalin Song Lyrics In English


நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ
கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ

பனித் தேர் வீதியில்
ஊர்வலமோஓஓஓ
பனித் தேர் வீதியில் ஊர்வலமோ
எண்ணம் பல சொல்லும் வழி கண்ணின் தடமோ
இன்னும் கலை சொல்லித் தரும் கன்னித் தமிழோ

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்


அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ
அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ

மனத்தால் வார்த்திடும்
பூச் சரமோ ஓ ஓ ஓ
மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ
அங்கம் தனில் கங்கைக் கரை தங்கும் சுகமோ
பொங்கும் புனல் மங்கை மனம் உன் கை வரமோ

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்