Neethane Endru |
|---|
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா ஆஹோ
நீ தானே என்று கனவுகள் கண்டேனே
என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே
எனை பார்க்கிறாய் என்ன செய்கிறாய்
என் கனவுக்குள்ளே ஏன் கூட்டிச் சென்றாய்
எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன்
உன்னாலே நான் காதல் கொண்டேன்
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா ஆஹோ
நான் தானே என்று கனவுகள் கண்டாயே
உன் நெஞ்சுக்குள்ளே எனை பூட்டிக் கொண்டாயே
நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய்
உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய்
நான் சிலிர்க்கிறேன் ஏதும் மொழியின்றி
கண்ணாலே நீ காதல் சொன்னாய்
இமை சாய்த்து நீ பார்த்தால்
இதயம் பூவாய் உதிர்கிறதே
இரவோடும் பகலோடும்
உனது நினைவே வதைக்கிறதே
கை பேசி திரையை போல
கண்கள் இரண்டும் ஒலிக்கிறதே
உன் கொலுசின் ஒலிகள் சேர்த்து
ராகம் இசைக்கிறேன்
ஓ ஹோ போதுமே என் கண்மணி
பூமியே உன் காலடி
அடை மழை பொழியுதே
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
உவ்வாஹு வாஹா ஆஹோ
முகம் பார்த்து பேச இன்னும்
முழுதாய் தைரியம் வரவில்லையே
முதல் தீண்டல் நேரும் பொழுது
மூச்சு வருமா புரியலையே
போராடி வரம் வாங்கும்
கலை தான் காதல் புரிகிறதா
புரிகிறதா
ஏதேதோ பேசினாலும்
வார்த்தை பெருகிடுதே ஓஹோ
யாரடா நீ யாரடா உன் ஆசைகள் நீ கூறடா
என் உறுதிகள் உருகுதே ஓஹோ
நீ தானே என்று கனவுகள் கண்டேனே
என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே
நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய்
உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய்
எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன்
உன்னாலே நான் காதல் கொண்டேன்
