Nizhaledhu Inge Nijamedhu |
---|
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எம் ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் : வாலி
நிழலெது இங்கே நிஜமெது நினைக்கையில் மண்ட குழம்புது என்னைப் போல இருக்குறே ரொம்ப பாடு படுத்துறே
அட மாங்கா மடையா விதியா வினையா மயக்கங்கள் தெளியலையே இது விட்டலாச்சார்யா மர்மக்கதையா எனக்கொண்ணும் புரியலையே
ஹேஎனக்குந்தான் உன் போல் மயக்கந்தான் கலக்கந்தான் மண்ட கொழப்பந்தான் உன்னப் போல இருக்குறேன் இப்ப மாட்டி முழிக்கிறேன்
அட நாய் வால் தன்னை நிமிர்த்திட நெனச்சேன் கைகளை கடிச்சதய்யா என் காதல் கனியை கிராமக்கிளியை எனை விட்டு பிரிச்சதய்யா ஹே ஹேய்
எனக்குந்தான் உன் போல் மயக்கந்தான்
மாப்பிள்ளை உங்க மாமனாரு நான் உதவிக்கு வரலாமா நீங்கள் நடத்தும் சண்டை காட்சியில் யோசனை தரலாமா
இருவருக்குள்ளே என்ன பிரச்சனை எங்கிட்ட சொல்லலாமா சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறேன் என் சொல்லை தள்ளலாமா
பூனை தான் புலியைப் போல் ஊரிலே திரியுது பூனையை புலியும் தான் பாத்து ஏன் நடுங்குது ஹோய் ஒத்தி போடா உன்னால் தலைவலி
ஒரிஜனல் சாதா ஒரிஜனல் உண்மை சொல் நீ யார் உண்மை சொல் இந்தக் கேள்வி ஏனுங்க நான் கிராமத்தானுங்க
அட என் போல் நீயும் உன் போல் நானும் இருப்பது சங்கடம்தான் இங்கு பூசல் வந்தால் இடையில் புகுந்து தடுப்பது என் கடந்தான்
நீ வந்த வேளை தூக்கம் போச்சுடா நிம்மதி எனக்கில்ல நீ பண்ண வேல தப்புக் காரியம் எல்லாம் என் மேலே
கட்டிய மனைவி சண்டை போடுறா நீ செஞ்ச வினைதானே காதலி எனையே விட்டு ஓடினா காரணம் நீதானே போய்யா
இருவரை ஒன்று போல் இறைவன் ஏன் படைக்கணும் ஒருத்தனின் பழிகளை அடுத்தவன் சுமக்கணும் விட்டுத் தள்ளு எல்லாம் தலைவிதி
நிஜமெது இங்கே நிழலெது நினைக்கையில் மண்ட குழம்புது என்னைப் போல இருக்குறே ரொம்ப பாடு படுத்துறே
அட எத்தனை காலம் இப்படி உன்னால் கவலையில் மிதப்பேனோ என் டாட்டர் மேட்டர் வாட்டர் கூட இனிமேல் குடிப்பேனோ
நிஜமெது இங்கே நிழலெதுஹோய்