O Nenje O Nenje |
---|
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
இந்தக் காதல் மலர்க்காட்சி அதற்கில்லை மனசாட்சி நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போனாயே நீ
என் கண்கள் இமை தாங்கும் இனி உன்னால் இடி தாங்கும்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது
உன் பேரை சொல்லாத நேரத்திலே என் நாக்கு எனைத் திட்டும் கோபத்திலே
உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தாங்காது நகக் கண்கள் அதிலும் அழுதால் அதுகூட போதாது
நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன் என் ரத்தத்தில் ஒரு பாதி கண்ணீராய் வெளியேறுதே
ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன் வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றல் அதைப் போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன் பூமியினைப் போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்
ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் எது நீயின்றி வாழ்கின்ற நான்தான் அது
உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம் உன் மடியில் உயிர் விடத்தானே மீண்டும் ஓர் சந்தர்ப்பம்
மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான் அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தான் நிற்குமோ
இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
இந்தக் காதல் மலர்க்காட்சி அதற்கில்லை மனசாட்சி நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போனாயே நீ
என் கண்கள் இமை தாங்கும் இனி உன்னால் இடி தாங்கும்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா