Odi Velaiyadu Papa |
---|
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
சின்னஞ் சிறு குருவி போலே நீ திரிந்து பறந்துவா பாப்பா வண்ணப் பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்தமதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்தியா மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்