Pala Kalam Vedhanaithan

Pala Kalam Vedhanaithan Song Lyrics In English


இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆஆஆஆஆஆஆஆ தாலேலோ தாலேலோதாலேலோ தாலேலோ பல காலம் வேதனைதான் நிலையானதல்ல விழி மூடி இது வேளை துயிலாய் என் கண்ணே துயிலாய் என் கண்ணே பல காலம் வேதனைதான் நிலையானதல்ல

தானீன்ற சேய்போல் நானீன்ற உன்னைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாள் பெரியன்னை மானே என் மயிலே என் மகனென்ற வாய்தான் மானே என் மயிலே என் மகனென்ற வாய்தான் மறந்தாலும் பேரன்பை மறந்திடுமோ மனந்தான்


விழி மூடி இது வேளை துயிலாய் என் கண்ணே தாலேலோ தாலேலோதாலேலோ தாலேலோ

சாத்வீகமில்லாத பெரியோர்கள் செயலை சகியாது மனம் வாடி நலியாதே மகனே தண்ணீரின் அலையோடு அலை மோதினாலும் தண்ணீரின் அலையோடு அலை மோதினாலும் தானொன்று சேராமல் போகாதென்னாளும்

பல காலம் வேதனைதான் நிலையானதல்ல தாலேலோ தாலேலோதாலேலோ தாலேலோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்