Pathirikkai Anbargale |
---|
பத்திரிக்கை அன்பர்களே பண்பான நண்பர்களே கிசுகிசு எழுதுகிற பேனா மன்னர்களே சொல்லட்டுமா என் கதைய சூடாக கேளுங்க நான் சின்னப் பையன் ஆனாலும் கெட்டிக்கார ஆளுங்க
உள்ளத சொல்லப்போறேன் உங்ககிட்ட சொல்லுங்கண்ணே உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன் ஆமாங்கண்ணே தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன் சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்
எங்க தாயும் தந்தையுமா ரெண்டு குருவி இருந்துச்சு ஒண்ணு பறந்து போயிடுச்சு இன்னுமொண்ணு இறந்து போயிடுச்சு நான் தனியானேன்
உள்ளத சொல்லப்போறேன் உங்ககிட்ட சொல்லுங்கண்ணே உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன் ஆமாங்கண்ணே தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன் சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்
ஏலக்கடையிலத்தான் ஏலம் விட்டு பாத்தேங்க ஏராளமா சேத்தேங்க ஊரான் கல்யாணத்துல மொய் எழுத போனேங்க பொய் எழுதி வச்சேங்க
நான் ஏலக்கடையிலத்தான் ஏலம் விட்டு பாத்தேங்க ஏராளமா சேத்தேங்க ஊரான் கல்யாணத்துல மொய் எழுத போனேங்க பொய் எழுதி வச்சேங்க
கோயில் புள்ளையாரை கூட்டாக சேர்த்தேங்க காச உண்டியலில் கணக்காக போட்டேங்க சாமி சத்தியமா இந்த பூமி சத்தியமா இங்க காந்தி போல மனுஷன் யாரும் வாழ முடியுமா
உள்ளத சொல்லப்போறேன் உங்ககிட்ட சொல்லுங்கண்ணே உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன் ஆமாங்கண்ணே தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன் சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்
யாரும் பிறப்பால திருடனுன்னு ஆகல திசை மாறிப் போகல வாழும் சமுதாயம் ஏழைகளை பாக்கல என்னான்னுதான் கேக்கல
ஹே யாரும் பிறப்பால திருடனுன்னு ஆகல திசை மாறிப் போகல வாழும் சமுதாயம் ஏழைகளை பாக்கல என்னான்னுதான் கேக்கல
பசிச்சா சோறில்ல படுத்தாக்க பாயில்ல கேட்டா தரமாட்டான் எடுத்தாக்க தப்பில்ல நானும் கெட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு திருவல்லிக்கேணி
ஹான் உள்ளத சொல்லிப்புட்டேன் உங்ககிட்ட சொல்லுங்கண்ணே உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன் ஆமாங்கண்ணே தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன் சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்
நம்ப அண்ணன் கெட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு திருவல்லிக்கேணி அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு திருவல்லிக்கேணி