Pethu Eduthavathaan

Pethu Eduthavathaan Song Lyrics In English


பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா

பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா

பிள்ளையின் மனசு
பித்தாச்சு இங்க பெத்தவ
மனசு கல்லாச்சு இன்னொரு
மனசு என்னாச்சு அது
முறிஞ்சுபோன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
தத்து கொடுத்துப்புட்டா

வயித்துல வளத்த
புள்ள வந்து நிக்க வாசலில்லை
மடியில வளந்ததுக்கு
இங்கிருக்க ஆசையில்லை

மகனா பொறந்ததுக்கு
தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது
நியாயமில்லை

தொட்டிலில் நாம்
கிடந்தா சோகம் வந்து
சேர்வதில்லை தோளிலே
வாழும் வரை துன்பமின்னு
ஒன்னுமில்லை

கட்டில பார்த்த
பின்னே காண்பதெல்லாம்
எங்கு சொல்ல கண்ணுல
ஆறிருக்கு போவதுக்கு
தோணி இல்லை

சட்டை கிழிஞ்சிருந்தா
தைச்சி முடிச்சிரலாம் நெஞ்சு
கிழிஞ்சிருச்சே எங்க
முறையிடலாம் காவிரி கங்கை
ஆறுகள் போல கண்களும்
இங்கே நீராட

பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா


தலையில் வகிடெடுத்த
தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதிவைச்ச
அந்த விரல் பார்த்தேனா

கிளியை வளர்த்தெடுத்தா
கேள்வியது கேட்காது புலியை
வளர்த்தெடுத்தா பாசமுன்னு
பார்க்காது

சொல்லத்தான்
வார்த்தையின்றி தாய்
மனசு நோகுமங்கே
சொல்லவே வாயுமின்றி
ஓர் மனசு வாடுமிங்கே

சொல்லிலே
வேலெடுத்து வீசுகின்ற
சேயுமங்கே மௌனத்தை
பேசவிட்டா மாறிவிடும்
யாவும் இங்கே

ரெண்டு கிளியிருக்கு
ஒன்னு தனிச்சிருக்கு பெத்த
கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே
காட்டுங்க எங்க தாய்ப்போல

பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா

பிள்ளையின் மனசு
பித்தாச்சு இங்க பெத்தவ
மனசு கல்லாச்சு இன்னொரு
மனசு என்னாச்சு அது
முறிஞ்சுபோன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா