Ponmalar Ingoru Punnagai

Ponmalar Ingoru Punnagai Song Lyrics In English


பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

கால் கொண்டு கை கொண்டு உலவ இரு கண்ணோடு மின்னல்கள் குலவ நடனம் புரியும் பதுமை இது எங்கேயும் இல்லாத புதுமை

சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பநிபநிஸா ஆஹ்ஹா நிஸநிஸக ஆஹ்ஹா ஸாஸநிநி நிநிநி ஸாஸஸாஸக தானன நானன்நாணன நானன்நானன னா

காட்டுக்குள் கூட்டுக்குள் துயர் பாட்டுக்கள் பாடிய குயில் கூட்டை துறந்ததோ விண்ணுக்கும் மண்ணுக்கும் அது கண்ணுக்கு எட்டிய வரை பாடிப் பறந்ததோ

இனி உலகம் முழுதும் தனது என உலவி திரியும் மனது இது சுகங்கள் விளையும் பொழுது இந்த இயற்க்கை அனைத்தும் அழகு

சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ




பூமிக்குள் மேகங்கள் வர மேகங்கள் இறங்கல் தர பூக்கள் மலர்ந்ததோ தூறல் சாரல் என தூவும் பனித்துளியில் தேகம் சிலிர்த்ததோ

முன்பு இரவும் பகலும் தனிமை இனி இளமை முழுதும் இனிமை நெஞ்சை விலகி நடக்கும் கவலை இனி விழிகள் எழுதும் கவிதை

சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

கால் கொண்டு கை கொண்டு உலவ இரு கண்ணோடு மின்னல்கள் குலவ நடனம் புரியும் பதுமை இது எங்கேயும் இல்லாத புதுமை

சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ