Poo Malarum Velaiyile

Poo Malarum Velaiyile Song Lyrics In English


பாடகர்கள் : பி ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : ஹச் ஆர் விஜயன்

பூ மலரும் வேளையிலே கண் மலர்ந்தாள் பெண் மயிலாள் வாய் மலர்ந்தால் வேங்குழல்தான் கை மலர்ந்தால் அபிநயம்தான் கை மலர்ந்தால் அபிநயம்தான்

காதினிக்க பேசிவிட்டீர் கண் குளிர பார்த்துவிட்டீர் காதினிக்க பேசிவிட்டீர் கண் குளிர பார்த்துவிட்டீர்

உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர் உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர் மனம் இனிக்க நான் மகிழ்ந்துவிட்டேன்

பூ மலரும் வேளையிலே


சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும் பெண் வந்தால் மயக்கம் தரும் சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும் பெண் வந்தால் மயக்கம் தரும் மென் மலரே நீ இப்போ என் மலராக நீ வந்தாய்

பூ மலரும் வேளையிலே

மழை வந்தால் மண் மணக்கும் பூ விரிந்தால் வாசம் வரும் மழை வந்தால் மண் மணக்கும் பூ விரிந்தால் வாசம் வரும்

நெய் மணந்தால் சுவை சேர்க்கும் பெண் மணந்தால் துணை சேர்க்கும் இந்த பெண் மணந்தால் துணை சேர்க்கும்

பூ மலரும் வேளையிலே லால் லல லா கண் மலர்ந்தாள் லால் லல லா பெண் மயிலாள் லால் லல லா வாய் மலர்ந்தால் லால் லல லா வேங்குழல்தான் லால் லல லா கை மலர்ந்தால் அபிநயம்தான் லால் லல லா கை மலர்ந்தால் அபிநயம்தான் லால் லல லா