Poo Poothathai Yaar – Kovai Murali

Poo Poothathai Yaar – Kovai Murali Song Lyrics In English


பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் யார் சொன்னது

பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபம் ஆனது அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது பருவம் வந்த போது காதல் நியாயமானது பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது

அழகு என்பது மெழுகைப் போன்றது அன்பு எனது விளக்கைப் போன்றது அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது

பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது


பறவை போல பரந்த வானில் பறந்து செல்கிறோம் பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம் உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடி கொள்கிறோம் ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்

மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம் மழலை பேசியே மடியில் சாய்கிறோம் இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் யார் சொன்னது

பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது