Raja Illa |
---|
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜா தான்
ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்
ஒரு தேசம் உண்டு உனக்கு
அது உனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு எனக்கு
அது எனக்குப் போதுமே
ஓஓஒஓஒஓஒ
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்
நட்பு எனும் ஏடெடுத்து
நான் வரைந்த முதல் எழுத்து
உன்னை அன்றி யாரும்
இல்லை ஊரிலே
எத்தனையோ
கோயில் கொண்டு
இங்கிருக்கும் தெய்வம் உண்டு
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே
சின்ன மலர்க் காவலுக்கு
என்றிருந்த தென்றலுக்கு
விட்டு விலகும் பொழுதும் வந்ததே
ஆசையாய் பூவிடு
வாய் வராத ஊமைக் குயில் போல
நானும் வாழ்கிறேன்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்
ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்
இங்கிருந்த காலங்களும்
அன்பு கொண்ட கோலங்களும்
எப்பொழுதும் வாழும்
இந்த கண்ணிலே
என்னுடைய எண்ணங்களும்
கற்பனையின் வண்ணங்களும்
என்னவென்று நானும் சொல்ல
சொல் இல்லே
நல்ல மனம் கொண்டிருக்கும்
நங்கை விழி கண்டிருக்கும்
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா
வானம் போல் உன் மனம்
பால் நிலாவைப் போல அதில்
நானும் வாழப் பார்க்கிறேன்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்
ஒரு தேசம் உண்டு எனக்கு
அது எனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு உனக்கு
அது உனக்குப் போதுமே
ஓஓஒஓஒஓஒ
ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்