Rajave Unthan Rajjiyathil |
---|
பாடலாசிரியர் : வாலி
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் லல்லலாலலல்லலா ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் லல்லலாலலல்லலா வண்ணம்பொங்கும்வாசம்வீசும் ஆனந்த மாளிகையில்தான்
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் லல்லலாலலல்லலா ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் லல்லலாலலல்லலா வண்ணம்பொங்கும்வாசம்வீசும் ஆனந்த மாளிகையில்தான்
நூறாண்டு நல்லா வாழ்ந்திருக்கணும் ஒன்றாக எல்லாம் சேர்ந்திருக்கணும் நீங்காத சொந்தம் காத்திருக்குது பூச்சூட நேரம் பார்த்திருக்குது
நெஞ்சே நெஞ்சே நீதான் எண்ணும் ஆசை கூடுமோ செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் லல்லலாலலல்லலா ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் லல்லலாலலல்லலா ஆஹா வண்ணம் ஆஹா பொங்கும் ஆஹா வாசம் ஆஹா வீசும் ஆனந்த மாளிகையில்தான்
பாட்டோடு இந்த ராகம் வந்தது நான் பாட நெஞ்சில் மோகம் வந்தது நெஞ்சோடு அன்று நீ நினைத்தது கைக் கூட இந்த நாள் பிறந்தது
ஏழை நெஞ்சில் ஆசை வந்தால் பாவம் ஆகுமோ தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோஓ
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் லல்லலாலலல்லலா ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் லல்லலாலலல்லலா வண்ணம்பொங்கும்வாசம்வீசும் ஆனந்த மாளிகையில்தான்