Santhana Kattinil Malligai |
---|
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள் ஆஆ சங்கதி பேசுங்கள்
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள் மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள்
மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள் மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள்
இருவர் : வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள் ஆஆ சங்கதி பேசுங்கள்
ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள் ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள் ஆசையென்னும் நீலக் கடலின் ஆழம் பாருங்கள்
பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே வேதம் படியுங்கள்
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள் ஆஆ சங்கதி பேசுங்கள்
ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள் ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள் ஊஞ்சல் போலே ஒருவர் தோளில் ஒருவர் ஆடுங்கள்
ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆதிக்கால மனிதரைப் போலே பாஷை பேசுங்கள்
இருவர் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள் ஆஆ சங்கதி பேசுங்கள்