Senthamizh Naadennum |
---|
ஆஅஆஆஆஆஆஆ ஆஅஆஆஆஆஆஆ ஆஅஆஆஆஆஆஆ
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
நீலத் திரைக்கட லோரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி யாரம் படைத்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
சக்தி பிறக்குது மூச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே