Thathuva Kalaiyudan Vithagar |
---|
தத்துவக் கலையுடன் வித்தகர் பணியாற்றும் சங்கம் வளர்த்த தமிழே தன்மானத் தமிழகம் சன்மானம் பெற்றிட தனிப் புகழ் கொண்ட தமிழே
மத்தகத் திமிர்மிகும் அந்நியன் உன்னையே மதியாது எதிர் காலமோ மலையோடு தலை மோதும் மமதையின் உருவத்தை மறைந்தோட செய்வாய் தமிழே
தரிந்தின தரிந்தின திரந்தின்னா தரிந்தின தரிந்தின திரந்தின்னா
இயல் இசை நாடகக் கலையாலே இகம் மீதில் செய்யும் தியாகம் இதனால் யாவரும் அடைவார் மோகம் இணைந்திடும் தமிழ்ச் சுவை பாராய்
தன்னாலே தான்கெட்ட தந்தனாக் கலைஞனே தலையை கனத்திடாதே கண்ணான இலக்கிய காதலியைக் காணாத கசடனே கலங்கிடாதே
அந்நாளிலே சிலர் ஆகா என்றார் என அசந்தையால் அலைந்திடாதே இந்நாளில் எங்கள் இயலிசைக் கலையை நீ எளிதாக எண்ணிடாதே