Thenil Vaditha Silaiye |
---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்
தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே
முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை தொட்ட இடம் பூ மணக்கும் மேனி பட்ட இடம் நான் மயங்க வா நீ
பார்வையில் ஜாடை நீ காட்டு மோகமே சேரும்போது பார்வையில் ஜாடை நீ காட்டு மோகமே சேரும்போது அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை
தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே
அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு சொன்னக் கதை போதும் அங்கம் எங்கும் தங்க வைத்து போனதய்யா மோகம்
தங்கமென நீ ஜொலிக்கும்போது ஏங்குதடி என் மனது பாரு
போகுதே ஆசை நூறாகும் பேச்சிலா ஆசை தீரும் போகுதே ஆசை நூறாகும் பேச்சிலா ஆசை தீரும் அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு
தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்