Ullamellam Thalladuthe Sad |
---|
உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே
வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா எண்ணும் யோகங்கள் உண்டாகுமா
ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா
தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன் தங்கம் போல் உன்னை பாராட்டுவேன்
உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே