Uyire Uyire Inimel |
---|
பாடலாசிரியர் : மணிமுடி
உயிரே ஆஆஆஆஆ
உயிரே உயிரே இனிமேல் சுகமோ ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ நினைவினில் மயங்கிய கனவுகள் கலைந்தோர் அமைதியை நாடுகிறாய் மண்ணில் உயிர்களை படைத்தவன் உயிருடன் இருந்தால் ஒருமுறை தேடுகிறாய்
உயிரே உயிரே இனிமேல் சுகமோ ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ
ஆஆஆஆஆஆஆஆஆ ஒளியே சிலையாய் உருவாகியதோ சிலையே உயிராய் எழுந்தாடியதோ மலைமுடிதனில் ஒளி தருகின்ற சுடராய் பிறவியில் உயர்ந்து விட்டாய்
எந்தன் மனமெனும் அரங்கினில் தினம் தினம் நடமிடும் நினைவுடன் கலந்துவிட்டாள்
ஒளியே சிலையாய் உருவாகியதோ சிலையே உயிராய் எழுந்தாடியதோ
ஆஆஆஆஆஆஆஆஆ
காற்றினிலே ஓர் உருவம் அமைத்து கைகளினாலே தேடினாள் தேடினாள் தேடினாள் நீரலை போடும் மேடையின் மேலே நிலவும் ஒளி போல் ஆடினாள் ஆடினாள் ஆடினாள்
இருளில் நிழலைத் தேடினாள் இன்று இவளே நிழலாய் மாறினாள் இருளில் நிழலைத் தேடினாள் இன்று இவளே நிழலாய் மாறினாள்
உயிரே உயிரே இனிமேல் சுகமோ ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ
ஏட்டினில் எழுதா காவியமே என் இதயத்தில் ஆடிடும் முல்லையே முல்லையே முல்லையே பாட்டினிலே உன் பெருமையை கூற தமிழினில் வார்த்தைகள் இல்லையே இல்லையே இல்லையே
தியாகத்தில் நீயொரு தீபமே கலை தேவதைகள் மலர் தூவுமே தியாகத்தில் நீயொரு தீபமே கலை தேவதைகள் மலர் தூவுமே
ஒளியே சிலையாய் உருவாகியதோ சிலையே உயிராய் எழுந்தாடியதோ
தேவர்கள் சபையில் நாட்டியம் ஆடும் ஆசையில் அங்கே போகிறாள் ஆசையில் அங்கே போகிறாள் வானத்தில் வந்து தேரொன்று நின்று வாவென்றழைப்பதை கேட்கிறாள் வாவென்றழைப்பதை கேட்கிறாள்
ஆடும் சலங்கைகள் ஓயுமா இதில் அடுத்தொரு பிறவியும் தோன்றுமோ ஆடும் சலங்கைகள் ஓயுமா இதில் அடுத்தொரு பிறவியும் தோன்றுமோ
உயிரே உயிரே இனிமேல் சுகமோ ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ
ஆஆஆஆஆஆஆஆஆ
இதுவரை வாழ்ந்த நான் முடிவிலே தவறினேன் ஆஆஆஆஆஆஆஆஆ கரை தொடும் வேளையில் கடலிலே மூழ்கினேன் ஆஆஆஆஆஆஆஆஆ
உலகமே மாயையாய் மாயையாய் மாயையாய் உறவுகள் மாயையாய் மாயையாய் மாயையாய்
மலரும் கலையே பிரியா விடைக் கொடு மறுபடி இங்கே பிறவா வரம் கொடு பிரியா விடைக் கொடு பிறவா வரம் கொடு பிரியா விடைக் கொடு பிறவா வரம் கொடு