Uyire Uyire Nalamthaana |
---|
உயிரே உயிரே நலம் தானா சம்மதம் தானாநிஜம் தானாநிம்மதி தானா அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி ரசித்திடவாஆ
உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே தொடுவானைத் தொட்டுவிட்டேனே அன்பே நிலவைப் பிடித்து உயிரை மடித்து கொடுத்திடவா
உயிரே உயிரே
மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க
மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க
மின்மினியே இதோ இதோ தான் கண்களும் பேசும் காதல் விழாதான் சந்தனமே இதோ இதோதான் குங்குமம் பூசும் காதல் விழாதான்
என் ஜீவனேஎன் ஜீவனே உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை
உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே உன்னை மூடி நனைந்தேனே அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து அனுப்பிடவாஆ
உயிரே உயிரே
சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட
அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே
வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே
என் ஜீவனேஎன் ஜீவனே கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்
உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே உடைப்போலே அணிந்தேனே அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில் மறைத்திடவா
உயிரே உயிரே