Vaa Kanmani

Vaa Kanmani Song Lyrics In English


ம்ம்ம்ம்ஹிம் ம்ம்ம்ஹீஹீம்ம்ம்ம்ம்ம்ம்

வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி

தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் வானில் வரும் சூர்யோதயம்ம் தாங்காத பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்ம்

பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள் நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள் கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம் கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி


ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது

பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன் நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்

காலங்கள் மாறினும்தேகங்கள் போயினும் காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்