Vasanthame Varugave |
---|
வசந்தமே வருகவே வசந்தமே வருகவே கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது மன்மதனாலே மலர்கணையாலே மலர்வதுதானே இன்பக் கலை
மேளம் முழங்கிட நாளும் நெருங்கிட மனம் மயங்கிடுதே அள்ளி அணைத்திட சொல்லிக் கொடுத்திட ஆசை பெருகுதே ஆஆஆஆ
வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம் ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம் அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம் ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம் காதலினாலே காவியம் ஆனோம் காவியம் போலே நாம் இருப்போம்
வஞ்சி மகிழ்ந்திட கொஞ்சி குலவிட வாழ்வு நம்மிடமே நெஞ்சம் தவித்திட மஞ்சம் அழைத்திட தஞ்சம் உன்னிடமேஆஅஆஆ
வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
இருவர் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் வசந்தமே வருகவே லாலாலாலா லாலாலாலா