Velavane Muruga Un

Velavane Muruga Un Song Lyrics In English


அலையாடும் செந்தூரில் ஆங்கார மூர்த்தியாய்
சூரசம்ஹாரம் புரிந்தாய்
அந்த ஆவேசம் தணியவே தந்தையருள் வேண்டியே
திருமுருகன் பூண்டி வந்தாய்
என் தாயும் தந்தையும் நீயல்லவா
உன் பிள்ளை குறை தீர்த்திடுவாய் வடிவேலவா

வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ
வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ
வேலவனே முருகா உன் காலடியே சரணம்

ஈராறு விழிகளிலே எப்போது அருள் சுரக்கும்
என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும்
ஈராறு விழிகளிலே எப்போதும் அருள் சுரக்கும்
என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும்

பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா
பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா
குற்றமே ஆனாலும் குறை தீர்க்க கூடாதா
வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ
வேலவனே முருகா உன் காலடியே சரணம்

சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு
அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று
சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு
அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று


கண்கண்ட தெய்வமே கந்தனே துணையென்று
உன்னையே நாடி வந்தேன்
முன் வந்து பார்க்கின்ற முருகனே துணையென்று
உன்னையே சரணடைந்தேன்

கண்கண்ட தெய்வமே கந்தனே துணையென்று
உன்னையே நாடி வந்தேன்
முன் வந்து பார்க்கின்ற முருகனே துணையென்று
உன்னையே சரணடைந்தேன்

அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு
அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு
ஆறுமுக வேலவனே நல்லவழிக்காட்டு
நல்ல வழிக்காட்டு
வேலவனே முருகா உன் காலடியே சரணம்