Yamuna Nathi Karaiyil |
---|
யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்
தீயிலே இவள் தூங்கினால்
கண்ணிலே உயிர் தாங்கினால்
சிறிய பறவை சிறையில் இருந்து
வெளி வருமா
யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்
என் கண்களோ
திரை மறைவில் நீ கொண்டதேன்
நீர் கொண்டதை இதுவரையில்
யார் கண்டது
ஊர் காணவே இளைய செடி
பூ பூத்தது
பூ காம்பிலே முள்ளு ஒன்று
யார் பார்த்தது
ஆடி விட வந்தேன் நித்தம் நித்தம்
ஆடுகின்ற காலில் ரத்தம் ரத்தம்
காளையரின் கண்ணில் சித்தம் சித்தம்
கன்னி மகள் நெஞ்சில் யுத்தம் யுத்தம்
புதிய மேகம்
புதிய நீரை பொழிந்திடுமா
யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்
வா மன்னவா
குதிரை ஒன்று நீ கொண்டு வா
உன் ராணியை சிறை உடைத்து
நீ கொண்டு போ
வா மன்னவா
சிறகு ரெண்டு நீ கொண்டு வா
உன் தேவியை வான்வெளியில்
நீ கொண்டு போ
பூவுக்கு எதுக்கு சட்டம் சட்டம்
வானிலே எதற்கு வட்டம் வட்டம்
என்னிடம் இருக்கு திட்டம் திட்டம்
வெற்றிதான் உனக்கு கிட்டும் கிட்டும்
உனது கையில் எனது ஜீவன்
திருப்பி கொடு
யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்
தீயிலே இவள் தூங்கினால்
கண்ணிலே உயிர் தாங்கினால்
சிறிய பறவை சிறையில் இருந்து
வெளி வருமா
யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்