Yamuna Nathi Karaiyil

Yamuna Nathi Karaiyil Song Lyrics In English


யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்

தீயிலே இவள் தூங்கினால்
கண்ணிலே உயிர் தாங்கினால்
சிறிய பறவை சிறையில் இருந்து
வெளி வருமா

யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்

என் கண்களோ
திரை மறைவில் நீ கொண்டதேன்
நீர் கொண்டதை இதுவரையில்
யார் கண்டது

ஊர் காணவே இளைய செடி
பூ பூத்தது
பூ காம்பிலே முள்ளு ஒன்று
யார் பார்த்தது

ஆடி விட வந்தேன் நித்தம் நித்தம்
ஆடுகின்ற காலில் ரத்தம் ரத்தம்
காளையரின் கண்ணில் சித்தம் சித்தம்
கன்னி மகள் நெஞ்சில் யுத்தம் யுத்தம்

புதிய மேகம்
புதிய நீரை பொழிந்திடுமா

யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்


வா மன்னவா
குதிரை ஒன்று நீ கொண்டு வா
உன் ராணியை சிறை உடைத்து
நீ கொண்டு போ

வா மன்னவா
சிறகு ரெண்டு நீ கொண்டு வா
உன் தேவியை வான்வெளியில்
நீ கொண்டு போ

பூவுக்கு எதுக்கு சட்டம் சட்டம்
வானிலே எதற்கு வட்டம் வட்டம்
என்னிடம் இருக்கு திட்டம் திட்டம்
வெற்றிதான் உனக்கு கிட்டும் கிட்டும்

உனது கையில் எனது ஜீவன்
திருப்பி கொடு

யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்

தீயிலே இவள் தூங்கினால்
கண்ணிலே உயிர் தாங்கினால்
சிறிய பறவை சிறையில் இருந்து
வெளி வருமா

யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்