எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல் வரிகள்

Starring Dhanush, Nayanthara
Movie Yaaradi Nee Mohini
Music ByYuvan Shankar Raja
Lyric By Na. Muthukumar
SingersUdit Narayan
Year 2008

Engeyo Partha Mayakkam Song Lyrics In English

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்

மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்

அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே

என்னானதோ ஏதானதோ
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க


மழையின் சாரல் என்னைத்
தாக்க விடைகள்
இல்லா கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்

ஆண்கள் வெக்கபடும்
தருணம் உன்னை பார்த்த
பின்பு நான் கண்டு கொண்டேன்

இடி விழுந்த வீட்டில்
இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே

வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு

இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து

Engeyo Partha Mayakkam Song Lyrics from movie Yaaradi Nee Mohini. Engeyo Partha Mayakkam song sung by Udit Narayan. Engeyo Partha Mayakkam Song Composed by Yuvan Shankar Raja. Engeyo Partha Mayakkam Song Lyrics was Penned by Na. Muthukumar. Yaaradi Nee Mohini movie cast Dhanush, Nayanthara in the lead role actor and actress. Yaaradi Nee Mohini movie released on 2008